/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மகளிடம் அத்துமீறல் தந்தைக்கு ' போக்சோ '
/
மகளிடம் அத்துமீறல் தந்தைக்கு ' போக்சோ '
ADDED : அக் 19, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: போதையில் மகளிடம் சில்மிஷம் செய்த தந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த 40 வயதான தந்தை, இரு நாட்களுக்கு முன் மதுபோதையில், தன் 17 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியின் தந்தையை, 'போக்சோ' சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்தனர்.