sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆசைவார்த்தை கூறி சிறுமியரை சீரழித்த இருவருக்கு போக்சோ

/

ஆசைவார்த்தை கூறி சிறுமியரை சீரழித்த இருவருக்கு போக்சோ

ஆசைவார்த்தை கூறி சிறுமியரை சீரழித்த இருவருக்கு போக்சோ

ஆசைவார்த்தை கூறி சிறுமியரை சீரழித்த இருவருக்கு போக்சோ


ADDED : பிப் 01, 2024 12:00 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

விளக்கனாம்பூடி கிராமத்தைச் சேர்ந்த ஹேமநாதன் 24, என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில ஆண்டுகளாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் மாணவியை வெளியூருக்கு அழைத்துச் சென்ற ஹேமநாதன், திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் தேடுவதை அறிந்து இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த மாவட்ட சமூகநல துறை அதிகாரிகள், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஹேமநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி@

@

திருத்தணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து வீட்டில் இருந்தார்.

இந்நிலையில், திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 35 என்பவர், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட பாலாஜியை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us