/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சுவரின்றி குளம், அங்கன்வாடி மையம்
/
சுற்றுச்சுவரின்றி குளம், அங்கன்வாடி மையம்
ADDED : பிப் 19, 2025 01:56 AM

பூண்டி,:பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளி அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையம், கோவில் குளத்தையொட்டி அமைந்துள்ளது. குளத்தை சுற்றியோ. அங்கன்வாடி மையத்தை சுற்றியோ சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.
இதனால் குழந்தைகள் விளையாடும் போது குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் சுற்றுச்சுவர் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, குழந்தைகளின் பாதுகாப்பை கருதி, குளம் மற்றும் அங்கன்வாடி மையத்தை சுற்றி சுவர் அமைக்க, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.