/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை ஓரத்தில் ஓட்டை வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலை ஓரத்தில் ஓட்டை வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மார் 20, 2025 02:51 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலை சந்திப்பு உள்ளது.
அப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கும் சிப்காட் சாலைக்கும் இடையே மழைநீர் கால்வாய் உள்ளது. அச்சாலையை கடந்து தினசரி, நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.
சில தினங்களுக்கு முன், அந்த கால்வாயில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. தற்போது அந்த உடைப்பு பெரியதானதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அந்த கால்வாய் உடைப்பை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.