sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி

/

தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி

தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி

தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பள்ளங்களால் கடும் அவதி


ADDED : செப் 11, 2025 03:03 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் இருந்து, கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை பராமரிப்பின்றி படுமோசமான நிலையில் உள்ளது. இச்சாலை, பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலை மற்றும் பொன்னேரி - செங்குன்றம் நெடுஞ்சாலையை இணைக்கிறது.

இந்த வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன. கடந்த மாதம் தடப்பெரும்பாக்கம் ஏரியில் குவாரி செயல்பட்டது. அதிக சுமையுடன் சென்ற மண் லாரிகளால் சாலை சேதமடைந்தது.

இச்சாலையின் பல்வேறு பகுதிகளில் மரண பயத்தை ஏற்படுத்தும், பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளங்களை தவிர்க்க வாகன ஓட்டிகள், மாற்று திசையில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுடன் மோதி, விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், கார்களின் அடிப்பகுதி பள்ளங்களில் சிக்கி சேதமடைகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பள்ளங்களில் தடுமாறி விழுந்து, சிறு சிறு காயமடைந்து வருகின்றனர்.

எனவே, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us