sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 திருமணமாகி மூன்றே மாதத்தில் கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை

/

 திருமணமாகி மூன்றே மாதத்தில் கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை

 திருமணமாகி மூன்றே மாதத்தில் கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை

 திருமணமாகி மூன்றே மாதத்தில் கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 25, 2025 03:17 AM

Google News

ADDED : நவ 25, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: சோழவரம் அருகே திருமணமாகி மூன்று மாதத்தில் கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மகள் நந்தினி, 27. இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும்போது, சோழவரம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த ராகுல், 30, என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த ஆக., 29ல் திருமணம் நடந்தது. கணவர் குடும்பத்தினருடன் காந்தி நகரில் வசித்து வந்தார். இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்ப பிரச்னை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த நந்தினி, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, நந்தினியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக, நந்தினியின் சித்தப்பா சொக்கலிங்கம், நேற்று முன்தினம் இரவு, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமாகி, மூன்று மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us