ADDED : ஏப் 07, 2025 11:54 PM
திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு தனியார் ஐ.டி.ஐ.,யில் 'டான்செம்' வாயிலாக, வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும், 'டான்செம்' நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சியை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், டிப்ளமா, பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர் மற்றும் கலை கல்லுாரியில் இளநிலை பட்டம் பெற்ற இளைஞர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடில் உள்ள டிரீம் இந்தியா தொழிற்நுட்ப கல்லுாரியில், வரும் 19ம் தேதி காலை 8:30 மணிக்கு நடைபெற உள்ள முகாமில், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் விபரங்களுக்கு, gcc.tansam@gmail.com என்ற இ - மெயில் மற்றும் 70107 02097, 99400 26121, 86818 78889, 95148 38485 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

