/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
18ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : அக் 15, 2024 08:54 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 18ல், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வரும் 18ல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், காலை 10:00 மணியளவில் நடக்கிறது. இதில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில பதிவு செய்துகொள்ளலாம்.
இதில், 10, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், தனியார்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், கணக்காளர், டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பணி வாய்ப்புகளைப் பெற்று பயனடையலாம்.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.