sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்வாரியத்தில் காலி பணியிடம் பராமரிப்பு பணிகளில் சிக்கல்

/

மின்வாரியத்தில் காலி பணியிடம் பராமரிப்பு பணிகளில் சிக்கல்

மின்வாரியத்தில் காலி பணியிடம் பராமரிப்பு பணிகளில் சிக்கல்

மின்வாரியத்தில் காலி பணியிடம் பராமரிப்பு பணிகளில் சிக்கல்


ADDED : ஜூன் 07, 2025 10:51 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் துணைமின் நிலையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெறுகிறது.

இங்கு, உதவி பொறியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மெதுார் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் கூறியதாவது:

இங்கு, நீண்டகாலமாக உதவி பொறியாளர் பணியிடம் காலியாகவே உள்ளது. பழவேற்காடு பிரிவு உதவி பொறியாளர் கூடுதல் பொறுப்பாக, மெதுார் துணைமின் நிலையத்தையும் கவனித்து வருகிறார்.

இங்கு உதவி பொறியாளர் இல்லாததால், பராமரிப்பு பணிகளுக்கு தேவையான மின் உபகரணங்களை உடனுக்குடன் பெற முடியாத நிலை உள்ளது.

மெதுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டுகளை உடனுக்குடன் சரிசெய்ய முடியாமல், மின் பயனீட்டாளர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மின்பாதை ஆய்வாளர் பணிகளில் பெண்கள் உள்ளனர். இவர்கள் களப்பணிக்கு செல்வதில்லை. கம்பியாளர்களும் வயதானவர்களாக உள்ளனர். இதனால், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

துணைமின் நிலையத்தில் உதவி பொறியாளர், உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us