sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஸ்ரீகிரண் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : பிப் 26, 2024 06:34 AM

Google News

ADDED : பிப் 26, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் பீகாக் மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிரண், தன் அறக்கட்டளை வாயிலாக பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், நேற்று திருத்தணி கமலா தியேட்டர் அருகே ஸ்ரீகிரண் அறக்கட்டளை மற்றும் திருவள்ளூர் மாற்றுத்திறனாளி நலச்சங்கம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயவேல் தலைமை வகித்தார். பீகாக் மருத்துவமனை மற்றும் ஸ்ரீகிரண் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரீகிரண் பங்கேற்று, 6 மூன்று சக்கர சைக்கிள், 55 பேருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.

மேலும், மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us