/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 391 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 391 மனுக்கள் ஏற்பு
ADDED : டிச 31, 2024 01:09 AM
திருவள்ளூர், டதிருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 391 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 102, சமூக பாதுகாப்பு திட்டம் 56, வேலைவாய்ப்பு வேண்டி 60, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 78, இதர துறை 95 என, மொத்தம், 391 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்தியபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.