/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 362 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 362 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 18, 2025 11:46 PM
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 362 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 85, சமூக பாதுகாப்பு திட்டம் 51, வேலைவாய்ப்பு வேண்டி 47, பசுமைவீடு, அடிப்படை வசதி கேட்டு 88, இதரதுறை 91 என, மொத்தம் 362 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், 3.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை உறுப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

