/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 442 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 442 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 10, 2025 11:01 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 442 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 112, சமூக பாதுகாப்பு திட்டம் 55, வேலைவாய்ப்பு வேண்டி 41, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 46 மற்றும் இதர துறை 188 என, மொத்தம் 442 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், பார்வையற்ற மற்றும் காது கேளாத கல்லுாரியில் பயிலும் 15 மாணவ - மாணவியருக்கு, 2.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மொபைல் போனை கலெக்டர் வழங்கினார்.

