/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 563 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 563 மனுக்கள் ஏற்பு
ADDED : ஏப் 21, 2025 11:40 PM
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால், நேற்று நடந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக - 163, சமூக பாதுகாப்பு திட்டம் - 110, வேலைவாய்ப்பு வேண்டி - 96, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் கோரி - 59 மற்றும் இதர துறை - 135 என, மொத்தம் 563 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷாராணி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.