/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 772 மனுக்கள் ஏற்பு
ADDED : ஏப் 08, 2025 12:19 AM
திருவள்ளூர், திருவள்ளூரில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தோர், நிலம் சம்பந்தமாக - 148, சமூக பாதுகாப்பு திட்டம் - 86, வேலைவாய்ப்பு வேண்டி - 135, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கோரி - 146, இதர துறை - 257 என, மொத்தம் 772 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், கூடுதல் நேர்முக உதவியாளர் - நிலம் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.