/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைமேம்பாலத்தில் கூரை அமைக்க புட்லுார் ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
/
நடைமேம்பாலத்தில் கூரை அமைக்க புட்லுார் ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
நடைமேம்பாலத்தில் கூரை அமைக்க புட்லுார் ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
நடைமேம்பாலத்தில் கூரை அமைக்க புட்லுார் ரயில் பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 16, 2025 02:22 AM

புட்லுார்:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுாரில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டை உள்ளது. புட்லுாரில் இருந்து, தினமும் 30,000க்கும் மேற்பட்டோர் ரயில் வாயிலாக பயணம் செய்கின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கோரி, ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, பயணியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிள் கூறியதாவது:
ரயில் நிலையத்தில் கணினி டிக்கெட் வழங்கும் மையம் இல்லாததால், விரைவு ரயில், ரிட்டர்ன் டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே, முன்பதிவற்ற கணினி ரயில் மையம் வேண்டும்.
ரயில் பாதையை கடக்கும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தாலும், மிக உயரமாக இருப்பதால் முதியோர், ஊனமுற்றோர் சிரமப்படுகின்றனர். எனவே, நடைமேம்பாலம் அருகே, இருபுறமும் 'லிப்ட்' வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேம்பாலத்தின் மீது நிழற்குடை இல்லாததால், மழை, வெயில் காலத்தில் பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில் நிலையத்தின் நடைமேடை முழுதும் கூரை அமைக்க வேண்டும்.
கட்டண கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்தி, அனைத்து நடைமேடையிலும் ரயில் வரும் தகவல் அறிய, மின்னணு பலகை அமைக்க வேண்டும். ரயில் வருகை மற்றும் புறப்படுவது குறித்து, ஒலிபெருக்கியில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.