sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரு சாலைகளை இணைக்க ரயில் பயணியர் கோரிக்கை

/

இரு சாலைகளை இணைக்க ரயில் பயணியர் கோரிக்கை

இரு சாலைகளை இணைக்க ரயில் பயணியர் கோரிக்கை

இரு சாலைகளை இணைக்க ரயில் பயணியர் கோரிக்கை


ADDED : மே 12, 2025 11:20 PM

Google News

ADDED : மே 12, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவை, ரயில் நிலைய வளாகத்துடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில், பழைய தபால் தெரு சாலை அமைந்தள்ளது. இடைப்பட்ட பகுதி முழுதும் அரசு புறம்போக்கு நிலங்களாக உள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, அவ்வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர். தற்போது, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெருவில், ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

தடைகளாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால், 1 கி.மீ., துாரம் சுற்றிவர வேண்டிய நிலையில் ரயில் பயணியர் உள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் காலவிரயத்தால், ரயில் பயணியர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய வளாகத்துடன் பழைய தபால் தெரு சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us