sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் நிலைய பணி மந்தம் நலக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

/

ரயில் நிலைய பணி மந்தம் நலக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

ரயில் நிலைய பணி மந்தம் நலக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

ரயில் நிலைய பணி மந்தம் நலக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு


ADDED : அக் 09, 2025 03:01 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி மந்தகதியில் நடப்பதாக, ரயில் பயணியர் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.

சென்னை -- அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆறு நடைமேடை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

மத்திய அரசின், 'அம்ருத் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையத்தை மேம்படுத்தி, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, 28.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் பணிகள் துவங்கியது.

இந்நிலையில், பணி துவங்கி இரு ஆண்டுகளாகியும், ஆமை வேகத்தில் நடந்து வருவதாக, ரயில்வே துறைக்கு பல்வேறு புகார் வந்தது. நேற்று திருவள்ளூர் ரயில் நிலையத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளடக்கிய மத்திய அரசின் ரயில் பயணியர் நலக்குழுவின் உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.

பின், ரயில் நிலையம் முன் அமைக்கப்பட்டிருந்த முன்பதிவுக்கான கட்டடத்தை இடித்து, மத்திய அரசின் பணத்தை வீணடித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். முன்பதிவு டிக்கெட் கவுன்டரை இடித்துவிட்டு, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக டெண்டர் விடப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒன்று மற்றும் மூன்றாவது நடைமேடைகளை இணைக்கும் சுரங்கப்பாதை தரமற்று இருப்பதாகவும், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் வடிவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பினார்.

இது குறித்து, ரயில்வே துறை அமைச்சருக்கு தகவல் அளித்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us