/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலைகளில் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 27, 2024 01:19 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., நகர், துர்கா நகர், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில், தெருச்சாலைகள் சீரமைக்கப்படாததால், மழைநீர் தேங்கி, சகதியாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் பல்வேறு பகுதிகளில் தெருச்சாலை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. தற்போது பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடிந்த இடங்களில் தெருச்சாலைகள் சீரமைக்கப்படுகின்றன.
அதே சமயம் மேற்கண்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு, அதற்கான பணிகள் முடிந்த நிலையில், சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
மழை பெய்தால் தெருச்சாலைகளில் மழைநீர் தேங்கி விடுவதால், குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.