sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

/

ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்


ADDED : செப் 07, 2025 12:54 AM

Google News

ADDED : செப் 07, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீர் வெளியேற, கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், வேடங்கிநல்லுார் ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மேம்பாலத்திலும், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழுள்ள சாலையிலும் செல்லும் வகையில் பணி நடந்து வருகிறது.

மழைக்காலத்தில் மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. இதனால், ஊத்துக்கோட்டை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து, நம் நாளிதழில் சமீபத்தில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us