sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வடிகால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்

/

வடிகால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்

வடிகால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்

வடிகால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்


ADDED : ஜன 20, 2025 01:59 AM

Google News

ADDED : ஜன 20, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் காலை, 10:30 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருத்தணி நகரத்தில் ம.பொ.சி.சாலை, ரயில்வே நிலையம் மற்றும் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கின.

இதனால் மக்கள் மற்றும் பயணியர் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் கனமழையால், முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர்.

அதே போல் திருத்தணி ஒன்றியம் காசிநாதபுரம் கிராமத்தில் நேற்று கனமழை பெய்தால், அம்மன் கோவில் தெரு மற்றும் சந்துதெரு ஆகிய இடங்களில் மழைநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் தெருக்களில் குளம்போல் மழைநீர் தேங்கியிருந்தால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.

ஒன்றிய நிர்வாகம் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us