/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடையில் தரைப்பாலம் அமைக்க ராமாபுரம் கிராமத்தினர் எதிர்பார்ப்பு
/
ஓடையில் தரைப்பாலம் அமைக்க ராமாபுரம் கிராமத்தினர் எதிர்பார்ப்பு
ஓடையில் தரைப்பாலம் அமைக்க ராமாபுரம் கிராமத்தினர் எதிர்பார்ப்பு
ஓடையில் தரைப்பாலம் அமைக்க ராமாபுரம் கிராமத்தினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 27, 2025 11:23 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே.எஸ்.ராமாபுரம் கிராமம். இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியினர், அத்தியாவசிய தேவைகளுக்கு, சின்னம்மாபேட்டை அல்லது தக்கோலம் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியினர் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல ஜே.எஸ்.ராமாபுரம் ஓடையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆள் மூழ்கும் அளவு நீர் செல்லும். இதனால் பள்ளி, கல்லுாரி, பணிக்கு செல்வோர். ஓடையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் ஒவ்வொரு முறை மழைக்காலத்திலும். தீவில் சிக்குவதாய், 10 -- 20 நாட்கள் மக்கள் வீட்டில் முடங்குகின்றனர்.
எனவே, இந்த ஓடைக்கால்வாயின் குறுக்கே, சிறு தரைப்பாலம் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.