/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளை நடக்கிறது ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
/
நாளை நடக்கிறது ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
ADDED : அக் 09, 2025 10:21 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை, ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடக்கிறது என, கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், நாளை குறைதீர் முகாம் நடக்கிறது.
முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவு செய்தல் ஆகியவை தொடர்பான விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், 'அந்த்யோதயா, அன்ன யோஜனா' குடும்ப அட்டைதாரர்கள், அனைத்து உறுப்பினர்களும் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாகி உள்ளது.
இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளில், வரும் 25ம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளவும்.