/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 13, 2025 07:57 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில், இன்று ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம், வட்ட அளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் 'அந்த்யோதயா, அன்ன யோஜனா' குடும்ப அட்டைதாரர்கள், அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதுவரை விரல்ரேகையை பதிவு செய்யாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே உள்ள ரேஷன் கடைகளில், வரும் 27ம் தேதிக்குள் விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.