/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
/
ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம்
ADDED : செப் 11, 2025 09:48 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில், நாளை ரேஷன் கார்டுதாரர் குறைதீர் முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம்.
முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் வட்ட அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், மக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.