/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு
/
பழவேற்காடு கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : பிப் 10, 2024 08:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு:பழவேற்காடு, வைரவன் குப்பம் கடற்கரை பகுதியில், நேற்று காலை, அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது. அதிகாலையில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள், திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நபரின் அடையாளங்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.