sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை பணிக்கு மின்கம்பங்கள் இடமாற்றம்

/

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை பணிக்கு மின்கம்பங்கள் இடமாற்றம்

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை பணிக்கு மின்கம்பங்கள் இடமாற்றம்

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை பணிக்கு மின்கம்பங்கள் இடமாற்றம்


ADDED : மே 01, 2025 01:39 AM

Google News

ADDED : மே 01, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருநின்றவூர் -- ரேணிகுண்டா வரை, 124 கி.மீ., துாரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி, கடந்த 2011ல், 571 கோடி ரூபாய் நிதியில் துவங்கியது.

ஆந்திர மாநிலம், புத்துார் -- ரேணிகுண்டா வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் -- புத்துார் வரை, இருவழிச் சாலையாக மட்டும் மாற்றப்பட்டது.

திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, திருநின்றவூர் வரை பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்தாண்டு இப்பணி துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், திருவள்ளூர் - திருத்தணி வரை நான்கு வழிச்சாலை அமைக்க, சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை துறை நிலம் கையகப்படுத்தி, எல்லை கற்கள் நடப்பட்டன.

ஆறு மாதங்களுக்கு திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, ஏற்கனவே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த எல்லை கல் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடையும் அகற்றப்பட உள்ளது. பணி துவங்கியதை அடுத்து, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை அகற்றி, மின்கம்பிகளையும் மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அப்பணி நிறைவடைந்ததும், மீதமுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படும். அதன்பின், சாலை அகலப்படுத்தும் பணி துவங்கவுள்ளதாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us