/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி துணை மின் நிலையத்திற்கும் ஓடைக்கும் இடையே சுவர் அமைக்க கோரிக்கை
/
கும்மிடி துணை மின் நிலையத்திற்கும் ஓடைக்கும் இடையே சுவர் அமைக்க கோரிக்கை
கும்மிடி துணை மின் நிலையத்திற்கும் ஓடைக்கும் இடையே சுவர் அமைக்க கோரிக்கை
கும்மிடி துணை மின் நிலையத்திற்கும் ஓடைக்கும் இடையே சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : டிச 29, 2024 01:34 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், துணை மின் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து கும்மிடிப்பூண்டி நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
அந்த துணை மின் நிலையத்தை ஒட்டி, நீர் ஓடை செல்கிறது. தொடர் மழைக்காலங்களில் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, துணை மின் நிலையத்தில் மழை வெள்ளம் சூழந்து விடும். துணை மின் நிலையத்தில் சூழ்ந்த மழை வெள்ளம் வடியும் வரை, மின் வினியோகம் பாதிக்கப்படும்.
துணை மின் நிலையம் பாதுகாப்பு மற்றும் மழைக்காலங்களில் தடையற்ற மின் வினியோகம் பெற்றிட, ஓடைக்கும் துணை மின் நிலையத்திற்கு இடையே தடுப்பு ஏற்படுத்தும் விதமாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

