/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 27, 2024 01:23 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 124 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இதில் அரசு சார்பில் 113 அங்கன்வாடி மையங்களும், தனியார் பங்களிப்பில் 11 அங்கன்வாடி மையங்களும் செயல்படுகின்றன. இங்குள்ள அங்கன்வாடிமையங்களில், குறைந்தது, 15 முதல் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இவற்றில் சுற்றுச்சுவர் இல்லாமல், 80க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மேலும் திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, சின்னகளக்காட்டூர், பொன்னாங்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலை மற்றும் கிராமத்தின் முக்கிய சாலைகள் ஒட்டி அமைந்துள்ளன.
இதனால் குழந்தைகள் வெளியில் வந்து விளையாட முடியாத நிலை உள்ளது. மேலும் குழந்தைகள் சாலை இருப்பதை அறியாமல் வந்துவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, சாலையோர மையங்களில் சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.