/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
/
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
கால்நடைகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் நீர் நிரப்ப கோரிக்கை
ADDED : ஏப் 19, 2025 10:01 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதை சார்ந்து பலர், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை காலம் துவங்கியுள்ளதால், பல பகுதிகளில் நிலவும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
கால்நடைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, செரிமான கோளாறு ஏற்படுவதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கால்நடைகளின் தாகம் தீர்க்க, ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிராமங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்ப, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்க அமைக்கப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:
அனைத்து கால்நடை மருந்தகத்திலும், சிகிச்சை மற்றும் கருவூட்டலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு, குடிநீர் தொட்டி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.
அதேபோல, பல கிராமங்களில் தொட்டி ஏற்படுத்தப்பட்டும் தண்ணீர் இல்லாமல் உள்ளது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை, கால்நடைகள் பருகி வருகின்றன. தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

