/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி என்.எம்.எஸ்., நகர் பூங்கா முறையாக பராமரிக்க கோரிக்கை
/
கும்மிடி என்.எம்.எஸ்., நகர் பூங்கா முறையாக பராமரிக்க கோரிக்கை
கும்மிடி என்.எம்.எஸ்., நகர் பூங்கா முறையாக பராமரிக்க கோரிக்கை
கும்மிடி என்.எம்.எஸ்., நகர் பூங்கா முறையாக பராமரிக்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 02:15 AM
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.எம்.எஸ்., நகரில், 2013ம் ஆண்டு நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், பூங்கா மற்றும் சிறுவர் விளையாடி மகிழ, ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர், தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக, இந்த பூங்கா இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், அந்த பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை என, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, நடைபாதையை சுற்றி செடிகள் வளர்ந்து, சிமென்ட் இருக்கைகள் உடைந்துள்ளன. மேலும், மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதாரம் பாதிக்கும் அபாயநிலை உள்ளது.
பொலிவிழந்த பூங்காவிற்கு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் புத்துயிர் அளிக்க வேண்டும். அழகான செடி, கொடிகளை வளர்த்து, சிறுவர் - சிறுமியர் விளையாடி மகிழ, புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்து பராமரிக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

