sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சிப்காட் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

/

 சிப்காட் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

 சிப்காட் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை

 சிப்காட் - மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து இயக்க கோரிக்கை


ADDED : டிச 25, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: தொழிலாளர்களின் போக்குவரத்து வசதி கருதி, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகம், மாதர்பாக்கம் இடையே அரசு பேருந்து சேவை இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு போதிய பேருந்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் தினசரி பல இன்னல்களை சந்திக்கின்றனர். அதனால், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து, பாத்தப்பாளையம், ஈகுவார்பாளையம் வழியாக மாதர்பாக்கம் வரை, காலை - மாலை நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us