sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் அவதி

/

 கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் அவதி

 கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் அவதி

 கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் அவதி


ADDED : டிச 25, 2025 06:52 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், பெண் தொழிலாளர்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில், 4,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் அருகே உள்ள கிராமங்களில் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டியில் இருந்து தொலைவில் உள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லை. இதனால், அவர்கள் ஷேர் ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர்.

பெண் தொழிலாளர்களின் பிரதான போக்குவரத்து வாகனமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் தான். ஷேர் ஆட்டோவில் குறைந்தது, 20 பெண்கள் வரை ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர்.

பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை வழங்கிய தமிழக அரசு, கும்மிடிப்பூண்டி பகுதியில் பெண் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us