sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி - வஞ்சிவாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை

/

பொன்னேரி - வஞ்சிவாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை

பொன்னேரி - வஞ்சிவாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை

பொன்னேரி - வஞ்சிவாக்கம் பேருந்து இயக்க கோரிக்கை


ADDED : நவ 21, 2024 08:17 PM

Google News

ADDED : நவ 21, 2024 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி - வஞ்சிவாக்கம் கிராமங்களுக்கு இடையே தேவராஞ்சேரி, ஏருசிவன், மடிமைகண்டிகை, ஆசானபூதுார் என, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 20ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

கல்வி, சுகாதாரம், தொழில் என அத்யாவசிய தேவைகளுக்கு இவர்கள் பொன்னேரி வந்து செல்ல, பேருந்து வசதி இல்லை. கிராமவாசிகள் இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர்.

பள்ளி மாணவர்கள் உயர் கல்வியை தொடர மதிவண்டிகளில் பயணிக்கின்றனர். பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பெண் பிள்ளைகள் அவர் கல்வியை தொடர முடியாத நிலையும் இருக்கிறது. இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க வேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அவர்கள் விரக்தி அடைந்து உள்ளனர்.

உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பொன்னேரி - வஞ்சிவாக்கம் இடையே பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us