sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூடப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

/

மூடப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

மூடப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

மூடப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 25, 2025 10:48 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை அருகே மூடப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவரைப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவராஜகண்டிகை ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஊராட்சியை சுற்றி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கிருந்து, 13 கி.மீ.,யில் உள்ள தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையம் அமைந்துள்ளது.

இதனால், இப்பகுதிகளில் முறையான போலீஸ் கண்காணிப்பு இல்லை என, கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, குருவராஜகண்டிகை கிராம எல்லையில், தனியார் தொழிற்சாலை சார்பில், புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2023 ஜூன் மாதம் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

போலீசார் புறக்காவல் நிலையத்தை முறையாக பயன்படுத்தாமல்பூட்டியிருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

போதிய போலீசார் இன்றி, புறக்காவல் நிலையம் இயங்க முடியாத சூழல் நிலவுவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, கிராம மக்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாதுகாப்பு கருதி, குருவராஜகண்டிகை புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us