sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

/

பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை


ADDED : ஜன 02, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூண்டி:பூண்டி ஒன்றியம் குண்ணவளம் ஊராட்சி, குப்பத்துபாளையம் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டி வாயிலாக கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் உள்ளது.

கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பள்ளி அருகே உள்ளதால், மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே விளையாடி வருவதாக பெற்றோர் புலம்புகின்றனர்.

எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us