/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாற்றில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை
/
நந்தியாற்றில் முட்செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:நந்தியாற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருத்தணி வழியாக செல்லும் நந்தியாற்றில் 1 கி.மீ., துாரத்திற்கு அதிகளவில் முட்செடிகள் வளர்ந்துள்ளன.
இந்த முட்செடிகளால், ஆற்றில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள், நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நந்தியாற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.