/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை
/
ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை
ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை
ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2025 02:39 AM

பொன்னேரி:ஆந்திர மாநிலம் சதாசிவாகொண்டா பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி வழியாக பயணித்து பழவேற்காடு கடலில் கலக்கிறது.
இந்த ஆறு, பொன்னேரி அடுத்த சின்னகாவணம், லட்சுமிபுரம், கம்மார்பாளையம், பெரிய மனோபுரம், ஆலாடு, மனோபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக பயணிக்கிறது. மேற்கண்ட கிராமங்களில் உள்ள ஆற்றின் இருகரைகள் மீதும் முள்செடிகள் காடு போல் வளர்ந்துள்ளன.
அவற்றின் வேர்கள் கரைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி, கரைகள் பலவீனம் அடைந்து வருகின்றன. மேலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளில் ஏற்படும் நீர்க்கசிவு, விரிசல் உள்ளிட்டவைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதிலும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீர்வளத் துறையினர் ஆய்வு செய்து, ஆரணி ஆற்று கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.