sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை

/

ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை

ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை

ஆரணி ஆற்று கரைகளை சூழ்ந்த முள்செடிகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 06, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:ஆந்திர மாநிலம் சதாசிவாகொண்டா பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி வழியாக பயணித்து பழவேற்காடு கடலில் கலக்கிறது.

இந்த ஆறு, பொன்னேரி அடுத்த சின்னகாவணம், லட்சுமிபுரம், கம்மார்பாளையம், பெரிய மனோபுரம், ஆலாடு, மனோபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக பயணிக்கிறது. மேற்கண்ட கிராமங்களில் உள்ள ஆற்றின் இருகரைகள் மீதும் முள்செடிகள் காடு போல் வளர்ந்துள்ளன.

அவற்றின் வேர்கள் கரைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி, கரைகள் பலவீனம் அடைந்து வருகின்றன. மேலும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளில் ஏற்படும் நீர்க்கசிவு, விரிசல் உள்ளிட்டவைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதிலும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீர்வளத் துறையினர் ஆய்வு செய்து, ஆரணி ஆற்று கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us