sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

/

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை


ADDED : பிப் 07, 2025 02:13 AM

Google News

ADDED : பிப் 07, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூண்டி:பூண்டி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது மஞ்சாகுப்பம் கிராமம். இங்கு, திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அரசு நடுநிலைப் பள்ளி 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த பள்ளியில், சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் அடைந்தும், உடைந்தும் உள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு, கேள்விக்குறியாக உள்ளது. பாதுகாப்பு இல்லாத காரணத்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்.

மேலும், இரவு நேரங்களில், சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து, நாசம் செய்கின்றனர். சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுவதை கட்டுப்படுத்தும் விதமாகவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், சேதமடைந்துள்ள பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us