/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியில் நின்று செல்ல கோரிக்கை
/
தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியில் நின்று செல்ல கோரிக்கை
தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியில் நின்று செல்ல கோரிக்கை
தென் மாவட்டங்களை இணைக்கும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியில் நின்று செல்ல கோரிக்கை
ADDED : செப் 02, 2025 12:21 AM
கும்மிடிப்பூண்டி வடமாநிலங்களில் இருந்து தமிழக தென் மாவட்டங்களை இணைக்கும் விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என, சிப்காட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய் கண்டிகை சிப்காட், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 450க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மைய பகுதியாக கும்மிடிப்பூண்டி உள்ளது.
மேற்கண்ட தொழிற்சாலைகளில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள், தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இதற்கு முன், கும்மிடிப்பூண்டியில் இருந்து எளிதாக கோயம்பேடு சென்று, அங்கிருந்து நேரடி பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். தற்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரத்திற்கு சென்று, அங்கு இருந்து கிளாம்பாக்கம் சென்று, பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஏற்படுவதுடன், பொருட்களை சுமந்தபடி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வது சவாலாக உள்ளது.
எனவே, 'தென் மாவட்ட தொழிலாளர்கள் நலன் கருதி, வடமாநிலங்களில் இருந்து கும்மிடிப்பூண்டி, சென்னை மார்க்கமாக தென் மாவட்டங்களை இணைக்கும் விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்' என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் இருந்து இயக்கப்படும் ஹவுரா -- திருச்சி விரைவு ரயில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரயில், உத்திரபிரதேச மாநிலம் பனாரசில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் காசி தமிழ் விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--