sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

/

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த கோரிக்கை


ADDED : ஜூலை 31, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருத்தணி ஒன்றியம் மத்துார் - கொத்துார் சாலையில் மத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு முருக்கம்பட்டு உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு காலை நேரத்தில் மட்டுமே மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்கிறார். பின், செவிலியர்கள் தான் சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, முழுநேரம் மருத்துவர் தங்கியிருந்து சிகிச்சை அளிக்க ம கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி கூறியதாவது:

திருத்தணி ஒன்றியத்தில் நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும், 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் தங்கியிருந்து சிகிச்சை அளிப்பார். தரம் உயர்த்துவது அரசின் கொள்கை முடிவு.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us