/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளில் 'சிசிடிவி' பகுதிவாசிகள் கோரிக்கை
/
ஊராட்சிகளில் 'சிசிடிவி' பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : மே 17, 2025 02:08 AM
ஆர்.கே.பேட்டை,:ஆர்.கே.பேட்டை காவல் உட்கோட்ட பகுதிகளில், சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. சில சம்பவங்களில் குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்திமாஞ்சேரிபேட்டையில் ஊராட்சி சார்பில், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைத்து, அத்திமாஞ்சேரிபேட்டை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'சிசிடிவி' பொருத்தப்பட்டு இருந்தால், கண்காணிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, கொள்ளையர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுவர் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.