/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்
/
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்
பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2024 01:06 AM

திருவாலங்காடு,:திருவாலங்காடில் வட்டார வளர்ச்சி அலுவலகம், 1965ம் ஆண்டு, திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்ததால் அதன் அருகே 2015ம் ஆண்டு புதிய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது, அலுவலகம் புதிய கட்டடத்தில் இயங்கும் நிலையில், பழைய கட்டடம் உறுதி தன்மையை இழந்து கூரை சேதமடைந்து அவ்வப்போது உதிர்ந்து வருகிறது.
கட்டடம் பயன்பாடின்றி விடப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை அகற்றப்படவில்லை.
தற்போது, இந்த கட்டடத்தை நாடோடி வாழ்க்கை வாழ்வோர் தங்கும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டடம் விழுந்து விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது.
எனவே, ஆபத்தான பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.