sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாட்டிறைச்சி கழிவுகளால் குடியிருப்புவாசிகள் அவதி

/

மாட்டிறைச்சி கழிவுகளால் குடியிருப்புவாசிகள் அவதி

மாட்டிறைச்சி கழிவுகளால் குடியிருப்புவாசிகள் அவதி

மாட்டிறைச்சி கழிவுகளால் குடியிருப்புவாசிகள் அவதி


ADDED : ஜூன் 09, 2025 03:12 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் சாலைக்கு அருகே, சுடுகாடு பகுதி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.

இங்கு நகராட்சியின் குப்பை கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனிநபர்கள் சிலர், இறைச்சிக்காக மாடுகளை அறுக்கும் பணியை இதே பகுதியில் மேற்கொள்கின்றனர்.

கழிவுகளை சுகாதாரமின்றி திறந்த வெளியில் விட்டு செல்கின்றனர். இது அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:

இப்பகுதியில் நகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பை கழிவுகளை கொண்டு கொட்டுகின்றன. அவ்வப்போது அவை எரிக்கப்படுவதால், சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இந்நிலையில், மாடுகள் இங்கு கொண்டு வந்து அறுக்கப்படுகின்றன.

இறைச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு, தலை, கால், குடல் உள்ளிட்ட கழிவுகளை அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us