sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்று பாலத்தில் செடிகள் பலவீனம் அடையும் அபாயம்

/

ஆரணி ஆற்று பாலத்தில் செடிகள் பலவீனம் அடையும் அபாயம்

ஆரணி ஆற்று பாலத்தில் செடிகள் பலவீனம் அடையும் அபாயம்

ஆரணி ஆற்று பாலத்தில் செடிகள் பலவீனம் அடையும் அபாயம்


ADDED : ஆக 18, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 18, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் ஆரணி ஆற்று பாலத்தில், செடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி - பழவேற்காடு சாலையில், போலீசாச்சியம்மன்குளம் கிராமம் அருகில், ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், தடுப்புகளும் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன.

பாலம் பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான போக்குவரத்து வழித்தடமாக, இந்த பாலம் உள்ளது.

தற்போது பாலம் பலவீனம் அடைந்து வருவதால், மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மழைக்காலம் துவங்கும் முன், பாலத்தை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us