/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் 'சாம்பியன்'
/
ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி மண்டல கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : செப் 27, 2024 06:15 AM

சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட கல்லுாரிகளை, பல்வேறு மண்டலங்களாக பிரித்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
முதலாவது மண்டலத்திற்கான இருபாலருக்கான கூடைப்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைபேட்டை ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியில் நடத்தப்பட்டது. மொத்தம் 44 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'நாக் - அவுட்' முறையில் நடந்தது.
பெண்களுக்கான முதல் அரையிறுதியில், ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி, 20 - 12 என்ற கணக்கில் எஸ்.ஏ., பொறியியல்கல்லுாரியை தோற்கடித்தது.
மற்றொரு அரையிறுதியில் வேலம்மாள் பொறியியல் அணி, 16 - 7 என்ற கணக்கில், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியை தோற்கடித்தது.
நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், ஆர்.எம்.டி., பொறியியல் கல்லுாரி மற்றும் வேலம்மாள் பொறியியல் கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
அதில், 30 - 14 என்ற புள்ளியில், ஆர்.எம்.டி.,பொறியியல் கல்லுாரிஅணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி, 22 - 20 என்ற கணக்கில், ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரிஅணியை தோற்கடித்து, மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
ஆண்களுக்கான இறுதி போட்டியில், எஸ்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி, 27 - 19 என்ற கணக்கில் வேலம்மாள் பொறியியல் கல்லுாரியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.