/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்
/
நெற்களமாக மாறிய சாலை சின்னக்களக்காட்டூரில் அவலம்
ADDED : ஏப் 21, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, நெற்களம் இல்லாததால், தக்கோலம் ---- திருவாலங்காடு ரயில் நிலைய சாலையை நெற்களமாக மாற்றி உலர்த்தி வருகின்றனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சின்னகளக்காட்டூரில் நெற்களம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

