sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கரடு முரடான சுடுகாடு பாதை பொன்னேரியில் அவலம்

/

கரடு முரடான சுடுகாடு பாதை பொன்னேரியில் அவலம்

கரடு முரடான சுடுகாடு பாதை பொன்னேரியில் அவலம்

கரடு முரடான சுடுகாடு பாதை பொன்னேரியில் அவலம்


ADDED : நவ 03, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: சுடுகாட்டிற்கு செல்லும் சாலை கரடு முரடாகவும், மின் விளக்கு வசதி இல்லாமலும் இருப்பதால், இறுதி சடங்கு செய்ய செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொன்னேரி நகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட செங்குன்றம் சாலையில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாடு வளாகம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

சுடுகாட்டிற்கு செல்லும் பாதை முழுதும் மேடும் பள்ளமுமாக இருக்கிறது. மழைபெய்தால் சாலை சகதியாக மாறுகிறது.

மழைக்காலங்களில் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களுடன் செல்லும் வாகனங்கள், பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன.

மின் விளக்கு வசதியும் அங்கு இல்லாததால் இரவு நேரங்களில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுகின்றன. சுடுகாடு வளாகம் கழிவுநீர், குப்பை ஆகியவற்றால் சுகாதார மற்று உள்ளது.

சுடுகாடு சாலையை சீரமைத்து, மின் விளக்குகள் பொருத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us