sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கத்தி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி

/

 கத்தி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி

 கத்தி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி

 கத்தி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி


ADDED : ஜன 02, 2026 05:29 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஹார்டுவேர் நிறுவன முகவரை கத்தியை காட்டி மிரட்டி, 17.50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

திருவள்ளூர், ஆயில்மில் பகுதியில் உள்ள டி.ஆர்.எஸ் ஹார்டுவேர் நிறுவனத்தில் முகவராக பணிபுரிந்து வருபவர், கார்த்திகேயன், 40.

இவர் நேற்று முன்தினம் திருத்தணி உள்ள பல்வேறு கடைகளில் இருந்து, 17.50 லட்சம் ரூபாய் வசூல் செய்தார்.

பணத்துடன், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

திருத்தணி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில், கார்த்திகேயனை, நான்கு பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது.

பின் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி, கார்த்திகேயன் வைத்திருந்த, 17.50 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்து தப்பியது. கார்த்திகேயன் கொடுத்த புகாரின்படி கனகம்மசத்திரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us