sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.4 கோடி திட்டப்பணிகள் வீண் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் அவதி

/

ரூ.4 கோடி திட்டப்பணிகள் வீண் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் அவதி

ரூ.4 கோடி திட்டப்பணிகள் வீண் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் அவதி

ரூ.4 கோடி திட்டப்பணிகள் வீண் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் அவதி


ADDED : அக் 20, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் அருந்ததி நகரில் உள்ள 16 தெருக்களிலும், 20 ஆண்டுக்கு முன் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. குழாய்கள் பழுதானதால், அவற்றை மாற்ற திட்டமிடப்பட்டது.

இதற்காக நான்கு கோடி ரூபாய் செலவில், கடந்தாண்டு ஆகஸ்ட்டில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கின. மொத்தமுள்ள 16 தெருக்களில், 13ல் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டன.

பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தற்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதியினர் புகார் அளித்தனர். இதையடுத்து, அருந்ததி நகர் முழுதும் குடிநீர்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதை உறுதி செய்த நிலையில், தற்போது அதை சரி செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பகுதிவாசிகள் இன்னும் எட்டு தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

கடந்த 2023 ஆகஸ்ட்டில், வீரராகவன் தெருவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கின. அனைத்து பணிகள் முடிந்த நிலையில், குடிநீரில் வழக்கம் போல் கழிவுநீர் கலந்து வருகிறது. குறிப்பாக கந்தன் தெரு, ராங்கப்பன் தெரு, பங்காரு தெரு, பெரியபாளையத்தம்மன் தெரு மற்றும் சந்து, தாசரி தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது.

இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும். குழாய் பதிக்கும் பணியின் போது குடிநீர்வாரிய அதிகாரிகள் யாரும் நேரில் ஆய்வு செய்யவில்லை. முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரரை கொண்டு பணிகளை முடித்துள்ளனர். இதனால் பணமும் வீணாகியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us